Our Feeds


Thursday, January 19, 2023

News Editor

புதையல் தோண்டுவதற்கு முயன்ற நால்வர் கைது


 மஹியங்கனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயன்ற நால்வர் நேற்று புதன்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக மஹியங்கனை, மீகஹபிட்டிய - சொரபொர பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் புதையல் தோண்டுவதற்கு முயற்சித்த நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 23 முதல் 51 வயதுடையவர்கள் எனவும் அவர்கள் மஹியங்கனை, திஸ்ஸமஹாராம மற்றும் மாரகஹவௌ பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இதன்போது புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் மஹியங்கனை நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளனர். மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »