நானுஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற பஸ் - வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இன்றைய அமைச்சரவை கூட்டத்தொடரில் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நுவரெலியா – நானுஓயா பகுதியில் கடந்த 20ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 51 பேர் காயமடைந்திருந்தனர்.
இந்தநிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் குறிப்பிட்டுள்ளார்.