Our Feeds


Wednesday, January 25, 2023

ShortTalk

BREAKING: மின்வெட்டு தொடர்பில் இன்று வெளியான இறுதி முடிவு



கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை முடிவடையும் வரை தடையின்றி மின்சாரத்தை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.


மின்சக்தி, வலுசக்தி அமைச்சு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் ஆகியவற்றின் அதிகாரிகள், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

உயர்தர பரீட்சை முடிவடையும் வரை தடையின்றி மின்சாரத்தை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, உரிய தரப்பிடம் கோரியுள்ளது.

இதற்கு, உரிய தரப்பினர் இணங்கியுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவிக்கின்றது.

இதன்படி, இன்று முதல் எதிர்வரும் பெப்ரவரி 17ம் திகதி வரை தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம், உரிய தரப்பினர் இணங்கியுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »