வத்தளை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள பல பகுதிகளுக்கு பன்னிரண்டு மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
அந்த வகையில் குறித்த நீர் வெட்டு இன்று காலை 10 மணி முதல் இன்று இரவு 10 மணி வரை அமுலில் இருக்குமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வத்தளை, ஹெந்தல, அல்விஸ் டவுன், வெலிகடமுல்ல, கெரவலபிட்டிய, மாபோல, நாயக்கந்த, கலகஹடுவ மரதானை வீதி, ஹுனுப்பிட்டிய, வெடிகந்த, வெவல்துவ, பிரன்சாவத்தை, கிரிபத்கொட புதிய வீதி, பதிலியதுடுவ, தலுப்பிட்டிய வீதியில் இருந்து அக்பர் நகர பாலம் வரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.