கொழும்பில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்றும் ஹட்டன் நகரில் இருந்து கண்டி நோக்கி சென்ற அரச பஸ் உட்பட இரு அரச பஸ்களும், தியகல கினிகத்தேன பிரதான வீதியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின.
இதில் 8 பேர் காயமடைந்த நிலையில், கினிகத்தேன மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு கினிகத்தேன பொலிசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு வருவதாக கினிகத்தேன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.