இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
ஜனக ரத்நாயக்கவின் காரியாலயத்துக்கு சீல் வைக்குமாறு இன்று (16) பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கொள்ளுப்பிட்டி- மைக்கெல் வீதிப்பகுதியில் உள்ள அவரது காரியாலயத்துக்கு சீல் வைக்க பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.