பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரின் ஆலோசனையின் பேரில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, சமூக பொலிஸ் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு பிரிவிற்கு பொறுப்பாக இருந்த பிரதி பொலிஸ்மா அதிபர் யு.பி.ஏ.டி.கே.பி கருணாநாயக்க, மேல் மாகாண போக்குவரத்து பிரிவுக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபர் பதவிக்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
குறித்த பதவியில் முன்னர் கடமையாற்றிய சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் ஜீ.ஐ.டி.ஆர் விஜேசிங்க காலி மாவட்டத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பதில் பிரதி பொலிஸ்மா அதிபரான எல்.ஏ.சரத்குமார, மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவிற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக பதவி அவர் பதவி வகித்திருந்தார்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ. கே. ஜே. ஆர். சமூகக் காவல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவுக்குப் பொறுப்பான டிஐஜியாக திரு.டயஸ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இவர் இதற்கு முன்னர் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவிற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றினார்.
பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபரான ஏ.எல். யு. என். பி. லியனகே காலி மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.