கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றின் வழக்கு அறைக்கு பொறுப்பாக இருந்த மொஹமட் நியாஸ் என்ற நபரை எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று (16) உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வழக்குப் பொருட்கள் காணாமற் போனமை தொடர்பில் பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டைப் பரிசீலித்தபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.