Our Feeds


Tuesday, February 14, 2023

SHAHNI RAMEES

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 38 மில்லியன் டொலர்கள்








 தடையற்ற அத்தியாவசிய மற்றும் அவசர சுகாதார சேவைக்காக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று செவ்வாய்க்கிழமை (14) தெரிவித்தார்.


 


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், இலங்கைக்கான ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நாட்டின் சுகாதாரத் துறைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த எரிபொருளை குறிப்பாக டீசல் கொள்வனவு செய்வதற்கு நிதி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »