Our Feeds


Thursday, February 2, 2023

News Editor

வடக்குக், கிழக்கில் சஜித்துக்கு அமோக வரவேற்பு


 வடக்குக், கிழக்கு மாகாணங்களில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கு அமோக வரவேற்பிருப்பதாக தெரிவிக்கும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொண்ட ஒரே தலைவர் சஜித் எனவும் தெரிவித்தார். 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கு அமோக வெற்றி கிடைக்கும் எனவும், குருநாகல் மாநகரசபையின் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்திக்கே வெற்றி கிடைத்தது. இதன்படி, அம்மாநகர சபையின் மேயராக ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரே நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். 

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நாம் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுடனோ, ஐக்கிய தேசியக் கட்சியுடனோ இணைந்துப் பயணிக்கபோவதில்லை எனவும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »