Our Feeds


Sunday, February 5, 2023

SHAHNI RAMEES

நாளை மீண்டும் கூடவுள்ள அரசியலமைப்பு பேரவை...!

 

அரசியலமைப்பு பேரவை நாளை (06) மீண்டும் கூடவுள்ளது.



சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை பிற்பகல் 03 மணிக்கு சட்ட பேரவை கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.



கடந்த 25ஆம் திகதி முதல் முறையாக கூடிய அரசியலமைப்பு பேரவை, ஜனவரி 30ஆம் திகதி மீண்டும் கூடியது.



ஆணைக்குழுக்களுக்கு புதிய உறுப்பினர்களை நியமிக்கும் முறை குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன், அதற்கான விண்ணப்பங்களை கோரவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.



அதன்படி பெப்ரவரி 1 முதல் 15ஆம் திகதி வரை ஆணைக்குழுக்குளுக்கான உறுப்பினர்கள் விண்ணப்பங்களை அனுப்ப அவகாசம் உள்ளது.



ஏற்கனவே வெற்றிடமாக உள்ள பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கான புதிய நியமனங்கள் தொடர்பில் நாளை கூடவுள்ள அரசியலமைப்பு பேரவையில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »