Our Feeds


Friday, February 24, 2023

News Editor

தேர்தல் ஆணைக்குழுவில் விசேட கலந்துரையாடல்


 தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (24) நடைபெறவுள்ளது.


இந்த கலந்துரையாடல் இன்று காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.


தேர்தலை நடத்துவது தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் அதற்கு தற்போதுள்ள அரச நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இன்று கலந்துரையாடப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.


இதேவேளை, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்குமாறு உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை எதிர்வரும் மே மாதம் 11ஆம் திகதிக்கு மேலதிக பரிசீலனைக்காக ஒத்திவைக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »