மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரசை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.
சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கனேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்தும் முடிவை எதிர்த்து, மின் நுகர்வோர் சங்கம் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் ஆகியவை குறித்த மனுவை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.