Our Feeds


Friday, February 17, 2023

News Editor

வாகன உரிமையாளர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

 

வாகன சாரதிகளை அவதானமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.


நாட்டின் பல்வேறு பகுதிகளில் கார் திருட்டு சம்பவங்கள் பதிவாகி வருவதே இதற்கு காரணமென பொலிஸார் குறிப்பிட்டனர்.


சமீபத்தில் வாகன திருட்டு சம்பவமொன்று வெலிவேரிய பிரதேசத்தில் இருந்து பதிவாகி இருந்தது.


அங்கு சுமார் 32 இலட்சம் ரூபா பெறுமதியான கார் திருட்டு போனதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.


பின்னர் பொலிஸார் கைபேசி தரவுகளைக் கொண்டு சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.


சந்தேகநபர் 14 இலட்சம் ரூபாவுக்கு வாகனத்தை கொள்வனவு செய்துள்ளார், அவர் ஆடிஅம்பலம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


வாகனத்தை திருடிய நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், அவரை கைது செய்வதற்கான விசாரணைகளை வெலிவேரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »