Our Feeds


Thursday, February 16, 2023

News Editor

கொக்காவில பிரதேசத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் மரணம்


 சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்காவில பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவர் வீட்டினுள் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக சிலாபம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.


அதன்படி விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் உயிரிழந்தவர் 49 வயதுடையவர் என தெரிவித்துள்ளனர்.


உயிரிழந்தவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் அவரது மகன் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


சடலத்தின் பிரேதப் பரிசோதனை சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவரின் கழுத்தில் வெட்டுக் காயம் காணப்படுவதாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.


அதன்படி, இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »