Our Feeds


Monday, February 27, 2023

SHAHNI RAMEES

ருஹுணு பல்கலைக்கழக தொழில்நுட்ப பீடத்திற்கு தற்காலிக பூட்டு...!

 

ருஹுணு பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடம் ஒரு வார காலத்திற்கு மூடப்பட்டுள்ளது.



ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் நேற்றிரவு இடம்பெற்ற சம்பவம் ஒன்றின் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ருஹுணு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார்.



அதன்படி இன்று பிற்பகல் 2 மணிக்கு முன்னதாக மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தை விட்டு வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.



நேற்றிரவு பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த பகுதியில் சத்தம் எழுப்பியதாக பிரதேசவாசிகளால் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், பல்கலைக்கழக பொறுப்பாளர் அந்த இடத்திற்குச் சென்று தகவல் அறிந்ததாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.



பின்னர், அவர் தனது தங்குமிடத்திற்குத் திரும்பியபோது, ​​​​அவரது மனைவி மற்றும் தாயார் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.



தாக்குதலில் காயமடைந்த பொறுப்பாளரின் மனைவியும் தாயும் ஆந்தபான ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »