சட்டவிரோதமாக 10.5 கிலோ கிராம் தங்கத்தை கடத்திச்செல்ல முற்பட்ட இந்திய பிரஜை உட்பட 5 பேர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக தங்கத்தை மும்பைக்கு கொண்டு செல்ல முற்பட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக இலங்கை சுங்கப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.