Our Feeds


Sunday, March 12, 2023

ShortTalk

15ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலை நடவடிக்கைகள் முடங்குமா?



வரி அதிகரிப்பு, வாழ்க்கை செலவு அதிகரித்துள்ளமை உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்வரும் 15ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.


அனைத்து அரசு, தனியார் மற்றும் தனியார் உள்ளிட்ட தோட்டத் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்துஅரசாங்கத்தின் அழுத்தத்திற்கு எதிராக உழைக்கும் மக்கள் போராட்டம் என்ற ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

8 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அனைத்து ஆசிரியர்கள், அதிபர்கள், தனியார் ஆசிரியர்கள், துணைப் பாடசாலை ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோர் இந்தப் பணிப்புறக்கணிப்பில் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் பிரதேச கல்வி அலுவலகங்கள் மட்டத்தில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக அகில இலங்கை ஆசிரியர் சங்க கூட்டமைப்பு மேலும் தெரிவிக்கின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »