Our Feeds


Sunday, March 19, 2023

ShortTalk

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும் கட்டிப் பிடிப்பதும் தடைசெய்யப்பட்டவை அல்ல: உபவேந்தர் தெரிவிப்பு



பேராதனைப் பல்கலைக்கழகத்தில் காதலிப்பதும், கட்டிப்பிடிப்பதும் தடைசெய்யப்பட்டதல்ல, ஆனால் அதிகப்படியான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என பேராதனை பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் டி.எம். லமவன்ச தெரிவித்துள்ளார்.


அண்மையில் செனட் சபைக்கு அருகில் காதலர்கள் இருவர் கட்டிப்பிடித்த சம்பவம் தொடர்பாக பல்கலைக்கழக நிர்வாகத்தின் நடவடிக்கை குறித்து சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளதைக் சுட்டிக்காட்டிய அவர், பேராதனை பல்கலைக்கழகம் கட்டிப்பிடிப்பதைத் தடை செய்யாது என்றார்.


பல்கலைக்கழக வளாகத்தில் 1700 ஏக்கர் நிலப்பரப்பில் 13,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்றதாகவும், அவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தை எந்த வகையிலும் கட்டுப்படுத்தப் போவதில்லை என்றும் பேராசிரியர் லமவன்ச மேலும் கூறினார்.


“எனது நோக்கம் மாணவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும் நிலைநிறுத்துவதும் அவர்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதும் ஆகும். கோவிட் 19 தொற்றுநோய், தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து ஏற்பட்ட விளைவுகளில் மாணவர்களும் ஆசிரியர்களும் நியாயமான பங்கைக் கொண்டுள்ளனர். இதைக் கருத்தில் கொண்டு, நல்ல மனநிலையுடன் இணக்கமான குழுவாக பணியாற்ற அவர்களை அனுமதிக்கிறேன்” என்றார்.


பல்கலைக்கழக வளாகத்தில் கட்டிப்பிடிப்பது தடை செய்யப்படவில்லை. ஆனால் அவர்கள் தங்கள் பெற்றோரையும் பல்கலைக்கழகத்துக்கு சமூகமளிக்கும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட பார்வையாளர்களையும் சங்கடப்படுத்தாமல் இருக்கும் பொருட்டு, தங்கள் வரம்புகள் என்ன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் உபவேந்தர் மேலும் தெரிவித்தார். 


புதிது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »