Our Feeds


Saturday, March 11, 2023

ShortTalk

வெளிநாடு செல்லும் பெண்களுக்கான முக்கிய தகவல்



பணிப்பெண்களாக வௌிநாடுகளுக்கு செல்லும் 45 வயதிற்கும் குறைவான பெண்கள், தமது பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.


அந்த வகையில், 2 வயதிற்குக் குறைவான பிள்ளைகளைக் கொண்ட தாய்மாருக்கு வௌிநாட்டு வேலைவாய்ப்பிற்காக செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது.

2 வயதிற்கும் மேற்பட்ட பிள்ளைகளின் பராமரிப்பு செயற்பாடுகள் தொடர்பான அறிக்கையை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு சமர்ப்பிப்பது கட்டாயமானதாகும்.

பிள்ளைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கி சட்ட ரீதியான முறையில் வௌிநாடுகளுக்கு பயணிக்குமாறு வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »