ஒவ்வொரு 03 வருடங்களுக்கும் 25% சம்பளத்தை அதிகரிக்கும் வருடாந்த போனஸ் மற்றும் இதர கொடுப்பனவுகளை வழங்குவது தொடர்பாக மின்சார சபை மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்களுடனான கூட்டு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு செயலாளருக்கு அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிவித்துள்ளார்.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார்.