Our Feeds


Wednesday, March 8, 2023

SHAHNI RAMEES

ஊழியர் பற்றாக்குறையால் போக்குவரத்து ​சேவை பாதிப்பு...!

 

ஊழியர் பற்றாக்குறை காரணமாக தற்போது ரயில் மற்றும் இலங்கை போக்குவரத்து ​சபை சேவையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக போக்குவரத்து துறைசார் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.



இதனால் நாளாந்த ரயில் ​சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் பற்றாக்குறையால் இ.போ.ச ஊடாக அதிகபட்ச சேவையை வழங்குவதிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது.



இதனால் தமது நாளாந்த பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த முடியாத பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »