Our Feeds


Sunday, March 12, 2023

ShortTalk

BREAKING: நிதி அமைச்சரான ஜனாதிபதி ரனிலுக்கு, தேர்தல்கள் ஆணைக்குழு நேரடி கடிதம்!



உள்ளாட்சி மன்றத் தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு நிதி அமைச்சரிடம் தேர்தல் ஆணைக்குழு எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.

 

நிதியமைச்சர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

 

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான நிதியை வெளியிடுவது தொடர்பில் நேரடித் தீர்மானங்களை எடுக்க முடியாது எனவும் அதற்கு நிதி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் நிதி அமைச்சின் செயலாளர் அண்மையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தார்.

 

இதற்கமைய, தேர்தலுக்குத் தேவையான நிதியை விடுவிக்குமாறு தேர்தல் ஆணைக்குழு நிதி அமைச்சரிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்ததாக நிமல் ஜி. புஞ்சிஹேவா குறிப்பிட்டுள்ளார்.

 

உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு நிதிப் பற்றாக்குறை காரணமாக மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஏப்ரல் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

எவ்வாறாயினும், தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளுக்கு தேவையான நிதி இதுவரை கிடைக்கப்பெறாததால், வாக்குச் சீட்டு அச்சிடும் பணியை ஆரம்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பிரதானி கங்கானி லியனகே தெரிவித்துள்ளார்.

 

இதன்படி எதிர்வரும் மார்ச் மாதம் 20 ஆம் திகதிக்கு முன்னர் தபால் மூல வாக்குச்சீட்டுக்களை தபால் நிலையத்திற்கு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கங்கானி லியனகே குறிப்பிட்டுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »