Our Feeds


Friday, April 28, 2023

News Editor

உணவு ஒவ்வாமையால் 26 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி


 நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ பிரதேச பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 26 பாடசாலை மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


குறித்த பாடசாலை தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று மாணவர்களிற்கு வழங்கப்பட்ட பகல் உணவு ஒவ்வாமைக்கு காரணமாக உணவருந்திய வேளை மாணவர்கள் மயக்கமுற்று , வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போடும் செயற்பாடு காரணமாக உணவருந்தியவர்களில் சுமார் 26 க்கும் அதிகமான மாணவர்கள் வயிற்று வலி உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர் .

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »