Our Feeds


Saturday, April 22, 2023

ShortTalk

ஸ்ரீ லங்கன் நிறுவனத்திற்கு பொருளாதார சிக்கலா? 5 விமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளது ஏன்? வெளியான காரணம் இதுதான்!



ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் தமது சில விமானங்கள் நிதி சிக்கல்கள் காரணமாக இயக்கமின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை நிராகரித்துள்ளது.


அறிக்கையொன்றை வெளியிட்டு ஸ்ரீ லங்கன் விமான நிறுவனம் இது தொடர்பில் விளக்கமளித்துள்ளது.


A320 NEO குடும்பத்தைச் சேர்ந்த 5 விமானங்கள், தற்போது புதிய இயந்திரங்களை பொருத்துவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.


உலகளாவிய தொழில்துறையில் இயந்திரங்கள் பற்றாக்குறை மற்றும் இந்த வகை விமானங்களுக்கான இயந்திர பழுதுபார்ப்புகளுக்கு நீண்ட கால அவகாசம் தேவைப்படுகிறது என்பதே இதற்கான காரணம் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நிலையில், தற்போது அதன் விநியோகஸ்தர்களுடன் இணைந்து தீர்வொன்றை உருவாக்கி வருவதாகவும், எதிர்வரும் மாதங்களில் உலகளாவிய இயந்திர விநியோகம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் தெரிவித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »