உறவினர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தையடுத்து ஏற்பட்ட வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளதாக மிரிஹான தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மிரிஹான பகுதியைச் சேர்ந்த 34 வயதான டொன் சஜித் மதுசங்க என்பவரே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
படுகாயமடைந்த நபர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று (23) மது அருந்திவிட்டு இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
படுகாயமடைந்த நபர் ரக்குவானாவைச் சேர்ந்தவர். எனவும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ள மிரிஹான தலைமையக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.