பள்ளம - அடம்மன பிரதேசத்தில் வயலில் மின்னல் தாக்கி 37 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயொருவர் நேற்று (28) பிற்பகல் உயிரிழந்துள்ளார்.
பிள்ளைகளுக்கு இரவு உணவு வழங்குவதற்காக அருகாமையில் உள்ள காணியில் இருந்து முந்திரி விற்கச் சென்ற போதே இந்த விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நாட்களில் பலத்த மழை பெய்யும் போது மின்னலிலிருந்து பாதுகாத்துக்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.