முன்னாள் சட்டமா அதிபர் தப்புல த லிவேரா ஒரு சாட்சியாக இல்லாமல் குற்றம் சாட்டப்பட்டவர் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று காலை இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே கர்தினால் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
