Our Feeds


Friday, May 5, 2023

News Editor

எகிப்தில் கோர விபத்து – 17 பேர் உயிரிழப்பு


 தென்மேற்கு எகிப்தில் நியூ பள்ளத்தாக்கு மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் 45 பேரை ஏற்றிக் கொண்டு தலைநகர் கெய்ரோவுக்கு பயணிகள் பஸ் லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.


மேலும் இந்த விபத்தில் இருபத்தி ஒன்பது பேர் படுகாயமடைந்துள்ளனர். இவர்களை மீட்பதற்காக விபத்து நடந்த இடத்திற்கு சுமாா் 26 அம்புயூலன்ஸ்கள் அனுப்பப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. விபத்துக்கான காரணம் என்ன என்பதை அதிகாரிகள் விவரிக்கவில்லை.


இங்கு விபத்துகள் பெரும்பாலும் வேகம், மோசமான சாலைகள் அல்லது போக்குவரத்து சட்டங்களை சரியாக செயல்படுத்தாததால் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »