Our Feeds


Saturday, May 13, 2023

News Editor

வாராந்தம் 2000 டெங்கு நோயாளர்கள் அடையாளம்


 நாட்டில் வாராந்தம் சுமார் இரண்டாயிரம் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு நோய் தடுப்பு பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வருடத்தின் 18 ஆவது வாரத்தில், பதிவாகிய டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 954 ஆக உயர்ந்துள்ள நிலையில், கடந்த வருடம் அந்த எண்ணிக்கை ஆயிரத்து 209 ஆக பதிவானது.

 

இதேவேளை, மேல் மாகாணம் உள்ளிட்ட நாட்டின் பல பிரதேசங்களின் நுளம்பு குடம்பிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார குடம்பி விஞ்ஞான அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

 

நாடளாவிய ரீதியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »