கம்பளையில் காணாமல் போன நிலையில்,
கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாகக் கூறப்படும் யுவதியின் சடலம் சற்றுமுன் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.
22 வயதுடைய இளம் யுவதியின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த யுவதியை கொலை செய்ததாக கூறி இளைஞன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.