Our Feeds


Sunday, May 14, 2023

ShortTalk

25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டும் - ஜனாதிபதி ரனில்



இன்னும் 25 ஆண்டுகளில் நாடு வெற்றிப் பாதையை எட்டியிருக்கும் போது, நாம் எடுத்த நடவடிக்கையே நாட்டின் முன்னேற்றத்திற்கு வழிவகுத்தது என இளைஞர் சமூகம் பெருமிதம் கொள்ள முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லை பகுதியில் நேற்று இடம்பெற்ற பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுவின் இளம் உறுப்பினர்களை தெளிவுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் இந்த துறைசார் மேற்பார்வை குழு செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. (a)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »