Our Feeds


Thursday, May 4, 2023

News Editor

சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 மீனவர்கள் கைது

திருகோணமலையில் கடற்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இதன்போது குறித்த மீனவர்களின் 5 டிங்கி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.


இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் 18 முதல் 57 வயதுக்கு இடைப்பட்ட துறைமுகம், கிண்ணியா, மூதூர் ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்களாவர்.


குறித்த மீனவர்கள், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை மாவட்ட பிராந்திய கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »