Our Feeds


Thursday, May 4, 2023

News Editor

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் அடுத்த வாரம்

எக்ஸ்-பிரஸ் பேர்ல் கப்பல் விபத்து தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இம்மாதம் 10ஆம் திகதி புதன்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.


சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவின் தலைமையில் இடம்பெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.


அதன்படி, காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை ஒத்திவைப்பு விவாதம் நடைபெற உள்ளது. இதேவேளை, எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை நாடாளுமன்றம் கூடவுள்ளது.


செவ்வாய்கிழமையன்று, விசேட பொருட்கள் வரிச் சட்டத்தின் கீழ் எட்டு உத்தரவுகள் உட்பட பல சட்டமூலங்கள் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படவுள்ளன.


 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »