Our Feeds


Friday, May 12, 2023

News Editor

கண் சத்திரசிகிச்சையில் பாதிக்கப்பட்ட 30 பேர் கொழும்பு - கண்டிக்கு மாற்றம்


 நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களின் பார்வையில் பாதிப்பு ஏற்பட்டது . இதன் காரணமாக ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி சத்திரசிகிச்சைக்குள்ளான 32 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றன .

 

பாதிக்கப்பட்டவர்களில் ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் , 25 பேர் கண்டி வைத்தியசாலைக்கும் மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் தொடர்ந்து நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

இந்த விடயம் தொடர்பாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் மஹேந்திர செனவிரட்னவிடம் வினவிய போது.

 

இந்த சத்திரசிகிச்சையின் பின் பாவிக்கப்பட்ட தேசிய வைத்தியசாலையில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகுதி ப்ரெட்னிசோலோன் மருந்தை பயன்படுத்தியமையால் ஏற்பட்ட சிக்கலே இதற்கு முக்கிய காரணமாகும் ,

 

 அந்த மருந்தில் கிருமிநாசினி இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது இதனால் தற்போது கண் அறுவை சிகிச்சையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம் இந்த சம்பவம் நுவரெலியாவில் மாத்திரம் அல்ல கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையிலும் இடம்பெற்றுள்ளது. எனவே இது வைத்தியர்களின் தவறு அல்ல என்பதை பொது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவ்விடயம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது தற்போது அவர்கள் அனைவருக்கும் தீவிர சிகிச்சை செய்கிறோம் இன்னும் ஓரிரு தினங்களில் அவர்கள் குணமடைந்து விடுவார்கள் என நினைக்கின்றேன் என்றார்.

 

அண்மையில் கண் சத்திரசிகிச்சைக்குள்ளான 10 நோயாளர்கள் தாம் மீண்டும் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , ஓரளவு கண் பார்வை குறைவாக இருந்து சத்திரசிகிச்சை செய்த பின் முற்றாக பார்வை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »