Our Feeds


Friday, May 12, 2023

News Editor

மினுவாங்கொடையில் காணாமல் போன இரு ஆண்கள் சடலங்களாக மீட்பு


 மினுவாங்கொட - வாரியபொல பகுதியில் இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்று (மே 12) கண்டெடுக்கப்பட்டன.

                                

வாரியபொல பிரதேசத்தில் வயல் ஒன்றுக்கு அருகில் அமைந்துள்ள நீர் நிரம்பிய புதைக்குழியொன்றிலிருந்து இந்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

 

குறித்த நபர்கள் 24 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

 

குறித்த இருவரும் நேற்று முன்தினம் (10) முதல் காணாமல் போயிருந்த இருவரென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »