Our Feeds


Wednesday, May 3, 2023

ShortNews

சட்டரீதியான மது பாவனை குறைவடைந்தது ஏன்? என்பதை ஆராய வேண்டும். - நிதி ராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய



சட்டரீதியான மது பாவனை குறைவடைந்தமை தொடர்பில் ஆராயப்பட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.


ஊராப்பொல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கருத்துரைத்த போதே நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய இதனை தெரிவித்தார்.

அதேநேரம் பண்டிகைக் காலத்தில் சட்டவிரோத மது விற்பனையுடன் தொடர்புடைய 2 ஆயிரத்து 450 சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் 5ம் திகதி முதல் 25ம் திகதி வரையான காலப்பகுதியில் இந்த சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் சட்டவிரோத மது பாவனையின் ஊடாக சட்டரீதியான மது விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதா? என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என அவர் குறிப்பிட்டிருந்தார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »