Our Feeds


Wednesday, May 17, 2023

ShortTalk

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்காணை கைது செய்யத் தடை!



பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை கைது செய்வதற்கு எதிரான விடுக்கப்பட்ட உத்தரவை மே 31 ஆம் திகதிவரை இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் நீடித்துள்ளது.


அல் காதிர் அறக்கட்டளை வழக்கில் இம்ரான் கான் கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. 

பின்னர், இவ்வழக்கில் இம்ரான் கானுக்கு 2 வாரங்கள் முன்பிணை வழங்கி இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில்,  மே 9 ஆம் திகதிக்குப் பின்னர் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளில் அவரை 31 ஆம் திகதி வரை கைது செய்வதற்கு எதிராக இஸ்லாமாபாத் மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »