Our Feeds


Saturday, May 13, 2023

ShortTalk

சிறுமியை கடத்த முயன்ற இளைஞனை மடக்கி பிடித்த மக்கள் - முல்லைத்தீவில் அதிர்ச்சி



முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு கைவேலி பகுதியில் சிறுமி ஒருவரை கடத்த முயன்ற இளைஞன் ஒருவரை மக்கள் மடக்கி பிடித்துள்ளனர். 


இன்று காலை 7 மணியளவில் கைவேலிப்பகுதியில் 10 வயதுடைய சிறுமி தனியார் வகுப்பிற்காக தாயாரினால் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் சிறுமியினை அழைத்து கையினை பிடித்துக்கொண்டு முகத்தினை துணியால் பொத்திப்பிடித்த போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார்.


சிறிது நேரத்தின் பின்னர் கண்விழித்துக்கொண்ட சிறுமியின் தகவலின் படி குறித்த பகுதியினை சேர்ந்த இளைஞனின் பெயரினை சிறுமி கூறியதற்கு இணங்க கிராம அபிவிருத்தி சங்கத்தினர் இளைஞனை அழைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.


குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் 23 வயதுடைய இளைஞனை கைது செய்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »