திருகோணமலை -புல்மோட்டை 04 ஜின்னா நகரில் தொடர்ச்சியாக யானையின் அட்டகாசம் இருந்து வரும் நிலையில் இன்று அதிகாலை 03:30 மணியளவில் யானை குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ளது.
இதை தடுப்பதற்காக சிலர் ஈடுபட்டு நிலையில் முன்னாள் தபால் ஊழியரான 58 வயதான அப்துல்லத்தீப் அன்வர் என்பவர் யானை தாக்குதலுக்கு உள்ளாகி உயிரெழுந்துள்ளார்.
மேலும் சில வீடுகளுக்கு சேதம் ஏற்படுத்தி விட்டு ஒரு வீட்டை உடைத்து நெல் மூட்டைகள் சிலவற்றை தின்றுவிட்டு சென்றுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
யானையின் அட்டகாசம் தொடர்ச்சியாக இருந்து வருதனால் இன்னும் அட்டகாசம் தொடர்ந்தால் பல பாதிப்புகள் ஏற்படலாம் என மக்கள் அச்சப்படுகின்றனர்.
சம்பவ இடத்தில் சடலம் இருப்பதாகவும் விசாரணைகளை புல்மோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
( அப்துல்சலாம் யாசீம்)