Our Feeds


Thursday, May 4, 2023

ShortTalk

இன்று பிற்பகல் பல இடங்களுக்கு பலத்த மழை! - வளிமண்டலவியல் திணைக்களம்



நாட்டின் பல பகுதிகளில் இன்று (4) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.


மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும், ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லி மீற்றர் வரையான மழை பெய்யக்கூடும்.

மேற்கு மற்றும் தெற்கு கடலோர பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையின்போது, தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கோரியுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »