அவுஸ்திரேலியாவின் நியூ சவூத் வேல்ஸ் மாநிலத்தில் பேருந்தொன்று விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழந்தனர்.
இதையடுத்து இந்த விபத்தில் மேலும் 25 பேர் காயமடைந்தனர்.
மேலும் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொண்டு திரும்பிக் கொண்டிருந்தவர்கள் பயணம் செய்த பேருந்தொன்றே கவுன்ரி ட்ரைவ் பகுதியில் நேற்று விபத்துக்குள்ளானது என மேலதிக விசாரனையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் 58 வயதான பேருந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
விபத்தின்போது வீதியில் கடும் பனிமூட்டம் காணப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.