Our Feeds


Monday, June 19, 2023

ShortNews

மீண்டும் பலஸ்தீன் முஸ்லிம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் - 4 முஸ்லிம்கள் உயிரிழப்பு.



ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக்கரைப் பிரதேசத்தில் இஸ்ரேலிய படையினர் இன்று நடத்திய முற்றுகையில் பலஸ்தீனியர்கள் நால்வர் கொல்லப்பட்டுள்ளனர்.


இதையடுத்து நடந்த மோதல்களில் இஸ்ரேலிய படையினர் 7 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெலிகொப்டர் மூலமும் இஸ்ரேலியப் படையினர் தாக்குதல் நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

 4 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதுடன் மேலும் 61 பேர் வன்முறைகளில் காயடைந்தனர் என பலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

15 வயதான அஹ்மத் சகீர் என்பவரும் கொல்லப்பட்டதாக அவ்வமைச்சு தெரிவித்துள்ளது, கொல்லப்பட்டவர்களில் ஒருவரான அபு சாரியா (29) தனது போராளி என இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம் தெரிவித்துள்ளது. 

ஜெனின் நகர அகதிகள் முகாமில் அதிகாலை 4.00 மணிக்கு இஸ்ரேலியப் படையினரின் முற்றுகை ஆரம்பமாகியது. பிற்பகல் 2.25 மணியான வேளையிலும் மோதல்கள் தொடர்ந்துகொண்டிருந்ததாக ஏஎவ்பி செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »