Our Feeds


Wednesday, June 7, 2023

News Editor

பொலிஸ் ஜீப் விபத்துக்குள்ளானதில் 4 பொலிஸார் வைத்தியசாலையில்


நோர்வூட் பொலிஸ் நிலையத்துக்குச் சொந்தமான ஜீப் வண்டி ஒன்று ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பொலிஸ் உத்தியோகத்தர்கள் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியில் வென்சர் தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் நேற்று (06) இரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

 

நோர்வூட் பகுதியில் உள்ள அனுமதியற்ற மாணிக்கக்கல் குவாரி ஒன்றை சோதனையிடுவதற்காக நோர்வூட் சென்ஜோன்டிலரி தோட்டப் பகுதியிலிருந்து ஜீப் சென்று கொண்டிருந்தபோதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

 

விபத்தில் காயமடைந்த 4 பொலிஸ் உத்தியோகத்தர்களும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »