Our Feeds


Friday, June 9, 2023

ShortTalk

கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்திற்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்பவரினால் பதற்றம் - நடந்தது என்ன?



கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் ஆராதனையின்போது தேவாலயத்துக்குள் நுழைய முயன்ற இம்தியாஸ் என்ற நபர் சந்தேகத்தின் பேரில் கரையோரப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.



மாத்தளை அகலவத்தை பிரதேசத்தை நிரந்தர வதிவிடமாகவும் கொழும்பு மட்டக்குளிய பிரதேசத்தில் தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட 46 வயதுடைய நபரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.


தேவாலய ஆராதனைகளை கேட்க வேண்டும் என்பதற்காகவே தான் வந்ததாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.



நன்றி: தமிழன்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »