Our Feeds


Tuesday, June 20, 2023

ShortNews

இலங்கைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை!



இலங்கை ஐ.நாவின்  பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்


ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர்கள் முன்வைத்துள்ள பரிந்துரைகளை இலங்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என மனித உரிமைகள் ஆணையாளர் வோல்க்கர் டேர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தில் இடம்பெற்றுள்ள பொறுப்புக்கூறல் தொடர்பான அம்சங்களை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ள போதிலும் மனித உரிமை பேரவையுடன் தொடர்ந்து ஈடுபாட்டை பேணுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு ஐ.நாவின் அறிக்கையாளர்கள் பலர் கடந்த காலங்களில் விஜயம் மேற்கொண்டுள்ளனர் அவர்களின் பரிந்துரைகளை இலங்கை அதிகாரிகள் நடைமுறைப்படுத்த வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »