மாகாண சபை தேர்தலொன்றுக்கு தயாராகுமாறு
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரிடம் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ச தெரிவித்திருக்கிறார்.கட்சியின் சிரேஷ்ட பிரமுகர்களை இரகசியமாக சந்தித்த பெசில் , இந்தியாவின் வேண்டுகோளுக்கமைய மாகாண சபை தேர்தலே விரைவில் நடத்தப்படவுள்ளதாகவும் அதனால் அதற்கு தயாராகுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்கமைய, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மக்கள் சந்திப்புகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.
