Our Feeds


Tuesday, June 6, 2023

ShortNews Admin

கஜேந்திரகுமார் MP நாட்டை விட்டு வெளியேற தடை!



மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்குமூலம் வழங்கும்வரை அவர் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.


கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டி பொலிஸார் எனது வீட்டிற்கு வந்து சிங்களத்தில் எழுத்துமூல ஆவணமொன்றை வழங்கினார்கள்.

என்னால் சிங்களத்தில் வாசிக்க முடியாது என்பதால் அதனை நான் ஏற்றுக்கொள்ள மறுத்தேன் என தெரிவித்துள்ள கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதன் பின்னர் சிங்களத்தில் அதனை வாசித்த அவர்கள் நான் அதற்கு கட்டுப்படவேண்டும் என தெரிவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.

நான் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் ஆஜராகும் வரை நாட்டை விட்டு தடைவிதிக்ககோரும் வேண்டுகோளை கிளிநொச்சி நீதவானிடம் பொலிஸார் விடுத்துள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் நான் பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலத்தை பதிவுசெய்யும் வரை வெளிநாட்டிற்கு செல்வதற்கு எனக்கு அனுமதியளிக்கவேண்டாம் என நீதவான் உத்தரவிட்டுள்ளார் என கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »