Our Feeds


Tuesday, June 20, 2023

ShortNews

போலி PHI அதிகாரியை பிடித்து பொலிசில் ஒப்படைத்த கடை ஊழியர்கள் - நடந்தது என்ன?



பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி மோசடி செய்த ஒருவரை ரம்புக்கனை பொலிஸார் கைது செய்துள்ளனா்.


நேற்று (19) பிற்பகல் ரம்புக்கனை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் செய்த முறைப்பாட்டினை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 29 வயதுடைய திக்பிட்டிய, அரநாயக்க பிரதேசத்தை சேர்ந்தவா் என தொிவிக்கப்பட்டுள்ளது.


சந்தேகநபர் ரம்புக்கனை நகரில் உள்ள கடையொன்றுக்கு சென்று பொது சுகாதார பரிசோதகர் எனக் கூறி பணத்தினை கோாிய போது கடையின் ஊழியா்கள் அவரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.


சந்தேக நபர் இன்று (20) கேகாலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், ரம்புக்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »