Our Feeds


Monday, July 10, 2023

SHAHNI RAMEES

மற்றும் ஒரு கோர பஸ் விபத்து - 2 உயிரிழப்பு , 29 பேர் காயம்

 


அனுராதபுரம் - குருநாகல் வீதி அபண்பொல பிரதேசத்தில் இன்று (10) அதிகாலை இடம்பெற்ற மேலும் ஒரு கோர விபத்து 2 உயிரிழப்பு , மற்றும் 29 பேர் காயம்.

குரகல யாத்திரைக்கு சென்றுவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பஸ் வண்டி ஒன்றே விபத்துக்குள்ளாகி உள்ளது.

அனுராதபுரம் - குருநாகல் வீதியில் அம்பன்பொல பிரதேசத்தில் இன்று (10) அதிகாலை இந்த அனார்த்தம் இடம்பெற்றது.


வீதி ஒரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி ஒன்றின் பின் புறம் மோதியதில் பேருந்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 29 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்தவர்களில் 6 பெண்களும் ஒரு ஆண் உள்ளடக்கம்.


மேலும் 18 பெண்களும் நான்கு ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தலாவ பகுதியைச் சேர்ந்த 32 வயது மற்றும் 71 வயதுடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »